×

ஐபிஎல் ஏலத்தில் இருந்து 833 வீரர்கள் நீக்கம்: ஜெய் ஷா அதிரடி

மும்பை : 2024 ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் 19 அன்று நடக்க உள்ள நிலையில், ஏலத்தில் பங்கேற்க உள்ள வீரர்களின் இறுதிப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. முன்னதாக 1166 வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க தங்கள் பெயர்களை அளித்து இருந்தனர். தற்போது 333 வீரர்கள் மட்டுமே இறுதிப் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்கள். 833 வீரர்களின் பெயர்களை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிரடியாக நீக்கி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பங்கேற்கலாம் என்ற ஆசையில் பெரும் கனவுகளோடு தங்கள் பெயர்களை கொடுத்த பல இளம் வீரர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அதிகபட்சமாக பத்து ஐபிஎல் அணிகளிலும் சேர்த்து 77 இடங்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது. அதில் 30 வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 2 கோடி என்பது அதிக அடிப்படை விலையாகும், 23 வீரர்கள் மிக உயர்ந்த விலையான 2 கோடியை தங்களுக்கான அடிப்படை விலையாக நிர்ணயம் செய்து இருக்கிறார்கள். 1.5 கோடி ரூபாய் அடிப்படை விலையுடன் 13 வீரர்கள் ஏலப் பட்டியலில் உள்ளனர்.

The post ஐபிஎல் ஏலத்தில் இருந்து 833 வீரர்கள் நீக்கம்: ஜெய் ஷா அதிரடி appeared first on Dinakaran.

Tags : IPL ,Jay Shah ,Mumbai ,2024 IPL ,
× RELATED ராகுல் டிராவிட் விண்ணப்பிக்கலாம்: ஜெய் ஷா தகவல்